திருப்பூர் தொழில் துறையினரை சந்திக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்..!

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.


திருப்பூர்: கோவையை அடுத்து இன்று திருப்பூரில், நீலகிரி மற்றும் திருப்பூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் உள்ள தொழில் துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.பின்னலாடை, ஆயத்த ஆடை, பொறியியல் துறை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் அமைப்பினர், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கின்றனர். 

மூல பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி, ஒன்றிய அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கை உள்ளிட்டவற்றால் கடும் நெருக்கடியில் திருப்பூர் தொழில் துறையினர் தத்தளித்து வரையும் நிலையில் இன்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையிலே தொழில்துறையின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்களின் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிவார். 

அதேபோல, கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள தொழில் முனைவோர்,முதல்வரை திருப்பூரில் தங்கியுள்ள இடத்தில் சந்திக்கின்றனர்.

இந்த சந்திப்பில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வீட்டுவசதி வாரியதுறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...