தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உடுமலையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வு

ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கும், ஒரு கிலோ செண்டு மல்லி 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரோஸ் 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ செவ்வந்தி பூ 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பங்கி பூ 350 ரூபாய்க்கும் விற்பனையானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 400 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், தற்போது ரூ. 700 க்கும், செண்டு மல்லி கிலோ ரூ.50 இருந்த நிலையில் 400 ரூபாய்க்கும், ரோஸ் 150 ரூபாய்க்கு இருந்த நிலையில் ரூ 400க்கும், செவ்வந்தி பூ ரூ.200க்கும் விற்று வந்த நிலையில் 400 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 60 ரூபாய் இருந்த நிலையில் 350 ரூபாய்க்கும் விற்பனையானது.



இதே போல பழங்களின் விளையும் உயர்ந்துள்ளது. வாழைப்பழம் கிலோ 50 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 100 ரூபாய்க்கும், ஆப்பிள் கிலோ 200க்கு வந்த நிலையில் 240 க்கும், கொய்யாப்பழம் கிலோ 70 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், திராட்சை 100 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 140 க்கும், ஆரஞ்சு கிலோ 110க்கு விற்று வந்த நிலையில் 140க்கும், மாம்பழம் கிலோ 100 ரூபாய்க்கும் வந்த நிலையில் 160 ரூபாய்க்கும் விற்பனையானது. பூ மற்றும் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...