தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உடுமலையில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வு

ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கும், ஒரு கிலோ செண்டு மல்லி 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரோஸ் 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ செவ்வந்தி பூ 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பங்கி பூ 350 ரூபாய்க்கும் விற்பனையானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 400 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், தற்போது ரூ. 700 க்கும், செண்டு மல்லி கிலோ ரூ.50 இருந்த நிலையில் 400 ரூபாய்க்கும், ரோஸ் 150 ரூபாய்க்கு இருந்த நிலையில் ரூ 400க்கும், செவ்வந்தி பூ ரூ.200க்கும் விற்று வந்த நிலையில் 400 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 60 ரூபாய் இருந்த நிலையில் 350 ரூபாய்க்கும் விற்பனையானது.



இதே போல பழங்களின் விளையும் உயர்ந்துள்ளது. வாழைப்பழம் கிலோ 50 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 100 ரூபாய்க்கும், ஆப்பிள் கிலோ 200க்கு வந்த நிலையில் 240 க்கும், கொய்யாப்பழம் கிலோ 70 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், திராட்சை 100 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 140 க்கும், ஆரஞ்சு கிலோ 110க்கு விற்று வந்த நிலையில் 140க்கும், மாம்பழம் கிலோ 100 ரூபாய்க்கும் வந்த நிலையில் 160 ரூபாய்க்கும் விற்பனையானது. பூ மற்றும் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...