அவிநாசியில் மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சி - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.


திருப்பூர்: நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து அவிநாசி பகுதியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.



பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெண்கள் நலத் திட்டங்களான அனைத்து பெண்களுக்கும் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை எடுத்துரைத்தார்.



மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பெண்களின் மத்தியில் எடுத்துரைத்தது பெரும் வரவேற்பை பெற்றது. அங்கு கூடி இருந்த பெண்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று ஒருமித்த குரலில் கூறினர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...