அவிநாசியில் மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சி - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.


திருப்பூர்: நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து அவிநாசி பகுதியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.



பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெண்கள் நலத் திட்டங்களான அனைத்து பெண்களுக்கும் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை எடுத்துரைத்தார்.



மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பெண்களின் மத்தியில் எடுத்துரைத்தது பெரும் வரவேற்பை பெற்றது. அங்கு கூடி இருந்த பெண்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று ஒருமித்த குரலில் கூறினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...