இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர்  -  தமிழக முதல்வருடன் சந்திப்பு..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.


கோவை: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து முதல்வரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை வந்திருந்தார். 

அப்போது அவரை சந்தித்த கோவையை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் அவர்களது கோரிக்கையை ஏற்று சிறைவாசிகளை நிபந்தனை இன்றி விடுவித்த முதல்வருக்கு நன்றி கூறி பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர். 



இது குறித்து தெரிவித்துள்ள இஸ்லாமிய கூட்டமைப்பினர்,

ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கவும், அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை காக்கவும், சிறுபான்மை சமூக மக்களின் நலனை மீட்கவும், மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். 

இந்தியாவின் மிக சிறந்த மனிதநேய நடவடிக்கையாக 

2021 ஆம் ஆண்டு, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு முன்வைத்த முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை ஏற்று, எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் சிறைவாசிகள் விடுதலை செய்த திமுக அரசின் மனிதநேய நடவடிக்கைக்கு கோவை இஸ்லாமியகூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் மனிதநேய மக்கள் ஆட்சி அமைய, கோவை கூட்டமைப்பின் முயற்சிகள் மற்றும் களப்பணிகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து, 

சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. 



அதன்படி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களான - கோவை தொகுதி திமுக வேட்பாளர்கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு வழங்குவதற்கான, ஆதரவு நிலைப்பாடு கடிதம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர்,கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...