சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் - தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி மரியாதை

அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது முகாம் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது முகாம் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள். திமுக நகர கழக வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...