அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள புத்தர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கலந்துகொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட செல்வபுரம் கிராமத்திற்கு அருகில் மலை அடிவார பகுதியில் புத்த சீடர்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தர் கோவில் அமைத்து பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.



இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கோவிலுக்கு வருகை புரிந்தார். அதன் பின் உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணுதல், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் எந்த ஒரு வன்முறை இல்லாமல் நடைபெற வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் தமிழ் புலிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், மடத்துக்குளம் ஊடகப்பிரிவு நம்பிராஜன், எலையமுத்தூர் திமுக கிளை தலைவர் பழனிச்சாமி, கோவை ஆனந்தன், புத்தர் கோவில் ஆலய நிர்வாகிகள் காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...