நெகமம் பகுதியில் காவடி ஆட்டம், குதிரை ஆட்டம் ஆடி திமுக வேட்பாளருக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக நாட்டுப்புற கலைஞர்கள் நாதஸ்வரம், தவில், காவடியாட்டம், குதிரை ஆட்டம் ஆடி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: பாராளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியைக்கு ஆதரவாக தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நெகமம் பேருந்து நிறுத்தம் அருகில் நாதஸ்வரம், தவில், மேளதாளத்துடன் காவடியாட்டம், குதிரை ஆட்டம் ஆடி திமுக ஆட்சியில் இந்து அறநிலை துறை சார்பில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயங்களில் அன்னதானத் திட்டம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 112 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற நிதி ஒதுக்கீடு, உள்ளிட்ட திமுக ஆட்சியில் அறநிலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்களை பொதுமக்களிடம் வழங்கி நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...