பவர் டெக்ஸ் இந்தியா ஒரு தனித்துவம் வாய்ந்த விசைத்தறித் திட்டம்- சைமா


சைமாவின் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் மற்றும் விசைத்தறி துறையிரும் இணைந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை விசைத்தறி துறையினருக்கு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அது பவர்டெக்ஸ் இந்தியா திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இன்று சைமா தலைவரும், முன்னாள் விசைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் தலைவருமான எம்.செந்தில்குமார், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மராட்டிய மாநிலம் பிவாண்டியில் நேரடியாகவும், நாட்டின் மற்ற இடங்களில் காணொலி காட்சி மூலமும் துவக்கி வைத்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



இன்சிட்டு என்றழைக்கப்படும் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறியை நவீனப்படுத்துவது, குரூப் ஒர்க் ஷெட் திட்டம், நூல் வங்கி திட்டம், பொது வசதி மையம், விசைத்தறி நெசவாளர்களுக்கான பிரதான் மந்திரி கிரெடிட் திட்டம், விசைத்தறிக்கு சூரிய ஒளி மின் திட்டம், தகவல் தொழில்நுட்பம், விழிப்புணர்வு, சந்தை வளர்ச்சி, டெக்ஸ் வென்ச்சர் கேபிடல் பண்ட் மற்றும் நவீனப்படுத்தலுக்கு பண உதவி என பல்வேறு திட்டங்கள் பவர்டெக்ஸ் இந்திய திட்டத்தின் கீழ் அடங்கும்.

திருத்தியமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி, மாற்றியமைக்கப்பட்ட விரிவான விசைத்தறை வளர்ச்சி திட்டம், இன்சூரன்ஸ் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவையும் விசைத்தறி துறைக்கு ஏற்கனவே கிடைக்கிறது.

ஈரோட்டில் நடைபெற்ற பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தினை மத்திய ஜவுளித்துறையின் கூடுதல் செயலர் புஷ்பா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சின்னய்யன், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், ஜவுளி ஆணையர் அலுவலகத்தின் துணை இயக்குநர் ஓம் எம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சைமா தலைவர் செந்தில்குமார் விசைத்தறி துறைக்கு அறிவித்துள்ள திட்டங்கள் உலகளவில் நமது நாட்டு விசைத்தறி துறை போட்டியிட வழி வகுக்கும் என்றும் தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்வதற்கு உதவும் என்றும் கூறினார்.

விசைத்தறி துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் திட்டத்திற்கு 50 முதல் 90 சதவிகிதம் வரையிலான மானிய திட்டம் மூலம் மின் செலவு மிச்சமாகும். இதனால், மானிய விலையில் அல்லது இலவசமாக மின்சாரத்தை விசைத்தறிகளுக்கு வழங்கும் மராட்டியம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மானிய செலவு நிதிச் சுமை மிகவும் குறையும் என்றும் சைமா தலைவர் கூறினார்.

மேலும், அனைத்து விசைத்தறி நெசவாளர்களும் செந்தில்குமார் விடுத்த வேண்டுகோளில், பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை அனைவரும் பயன்படுத்தி உலகளவில் இந்த துறையை போட்டியிடும் வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...