வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் பட்டியல் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை), கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.17) தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தல் அன்று, வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்த கூடிய ஆவணங்கள் குறித்த பட்டியலை தெரிவித்துள்ளார். அதன்படி,

1.வாக்காளர் அடையாள அட்டை

2.ஆதார் அட்டை

3.மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை)

4.கணக்கு புத்தகங்கள் (வங்கி அஞ்சலகங்களால்

புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

5.மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

(மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

6.ஓட்டுனர் உரிமம் (பணியாளர் அடையாள அட்டை)

7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது)

8.வருமான வரி (நிரந்தர கணக்கு எண் அட்டை)

9.ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

10.இந்திய கடவுச்சீட்டு 10 ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)

11.அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது)

12.அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது) ஆகியவற்றை கொண்டு வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...