பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,701 வாக்கு சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், மை, பேனா, பென்சில், சீல் அரக்கு உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் வாக்கு அளிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் என ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் தேவையான அனைத்தும் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.



தொடர்ச்சியாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளை பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு 6 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1,701 வாக்கு சாவடிகளில் நடைபெற உள்ள நிலையில் இன்று வாக்கு பெட்டி இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தீவிர பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், மை, பேனா, பென்சில், சீல் அரக்கு உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மாற்று திறனாளிகள், முதியவர்கள் வாக்கு அளிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் என ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேவையான அனைத்தும் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...