உடுமலை அருகே பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து நான்கு நாட்களில் தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பெதம்பம்பட்டி அருகில் உள்ள ஜே கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் மூலம் 6500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் ஆண்டு பாசனத்தில் இரண்டாம் சுற்றில் ஜே கிருஷ்ணாபுரம் கிளை கால்வாய் பகுதியில் பாசனத்திற்கு ஐந்து நாட்கள் தண்ணீரை வழங்க வேண்டிய நிலையில், தற்சமயம் நான்கு நாட்கள் மட்டும் வழங்கி விட்டு தண்ணீர் முன்னறிவிப்பின்றி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதிலளிக்க காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உடுமலை செஞ்சேரிமலை சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொது பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் முறையாக வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.



உடுமலை அருகே சாலை மறியல் போராட்டம் காரணமாக உடுமலை செஞ்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...