தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்!


கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் தொடக்கி வைத்தார். 



இது குறித்து க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் கோவையில் துவங்கியது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.



இதில் 1,60,991 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகள் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக 33 மாநகராட்சி, நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், 45 பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளின் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் இன்று (ஏப்ரல் 2) மற்றும் இம்மாதம் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...