விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் வாக்களிப்பு

விளாங்குறிச்சி பகுதியில் உள்ள சேரன் மாநகர் அரசினர் நடுநிலைப் பள்ளியில், பாகம் எண் 387 இல் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் தனது வாக்கை பதிவு செய்தார்.


கோவை: கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள சேரன் மாநகர் அரசினர் நடுநிலைப் பள்ளியில், பாகம் எண் 387 இல் அமைக்க பெற்றுள்ள வாக்கு சாவடி மையத்தில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் (அதிமுக) இன்று தனது வாக்கை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் வாக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...