அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

போலியோ சொட்டு மருந்து 1581 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 3.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கு கண்டிப்பாக சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரின் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று பொது சுகாதராம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையுடன் ரோட்டரி கிளப் இணைந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்தினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கியதுடன் முகாமை துவக்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் 2.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.



பெற்றோர்களுக்கு ஏதுவாக அரசு தலைமை மருத்துவமனை, தாய் சேய் நல விடுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள், மற்றும் பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள் என 34 மையங்கள் செயல்படுவதுடன் 20 நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.

அனைத்து முகாம்களிலும் போதிய அளவு போலியோ சொட்டு மருந்து தயார் நிலையில் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களிலிருந்து பணி நிமிர்த்தமாக இடம்பெயர்ந்து வசிக்கின்ற குடும்பங்களை சேர்ந்த 1357 குழந்தைகளுக்கும் சிறப்பு முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து உத்திரவிடப்பட்டுள்ளது.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது.

இது நோய் தாக்குதலிருந்து குழந்தைகளை பாதுகாக்கக் கூடிய முக்கியமான மருந்தாக திகழக்கூடிய ஒன்றாகும். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொது சுகாதாரத்துறையுடன் அங்கன்வாடி பணியாளர்கள், பிறதுறை பணியாளர்கள் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என 6324 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

திட்டமிட்டப்படி 3.33 லட்சம் குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும் விதமாகவும் ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கும் மேலும் முன்பு எத்தனை முறை சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் தற்பொழுது நடைபெறுகின்ற இரண்டு முகாம்களிலும் பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எட்வின்ஜோ, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பானுமதி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் மரு.சுகந்தி, மரு.மனோண்மணி, மரு.பூமா, மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...