உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு – பொதுமக்கள் தேர்தல் புறக்ணிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், விவசாயிகளுக்கு மறுபயிர் கடன் வழங்காத காரணத்தினாலும் தேர்தலை புறக்கணிப்பாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றது. இந்த நிலையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விவசாயிகளுக்கும் மறுபயிர் கடன் வழங்காமல் காலதாமதம் பண்ணுவதை கண்டித்தும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கடந்த வாரம் பேனர் வைத்து கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஒருமனதாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரது சொத்துக்களையும் முடக்கம் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதனால் தேர்தல் புறக்கணிப்பை முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...