உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பூவோடு எடுக்கும் நிகழ்வு துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம்தேதி பூச்செறிதல் நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது .இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றம் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இதற்கிடையில் நேற்று இரவு பூவோடு எடுக்கும் நிகழ்வு தொடங்கியது. இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று 250 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்று பூவோடு எடுத்தனர். இன்று முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் குவிந்தனர்.

மேலும் தேர் திருவிழாவுக்கு தினமும் கூட்டம் அதிகமாக மாரியம்மன் கோவிலுக்கு வருவதால் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...