மாநில எல்லையில் மட்டும் வாகன சோதனை - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம்

கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவானதாவும், நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியதாவது, மாநிலம் முழுதும் இரவு 7:00 வரை 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில், தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. ஓட்டுச்சாவடியில் பதிவான 2 ஓட்டுகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

நேற்று வெயில் அதிகம் இருந்ததால் மாலை 3:00 மணிக்கு மேல் ஏராள மானோர் ஓட்டளித்தனர். மாலை 6:00 மணிக்கு உள்ளாக ஓட்டளிக்க வந்தவர்களுக்கு, டோக்கன் கொடுத்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு நிறைய இடத்தில் மாற்றப்படும். தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும் வரை, எல்லை பகுதியில் தேவைக்கேற்ப பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு செயல்படும், மற்ற பகுதிகளில் செயல்படாது.

எல்லை பகுதியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், கட்சியினர் அறிக்கை அடிப்படையில், மறுஓட்டுப்பதிவு தேவையென்றால் நடத்தப்படும். தேர்தல் மிகவும் சுமுகமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சிறப்பாக செயல்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...