லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் நீலகிரி தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரியில் தேயிலை தூள் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தூசி தர தேயிலை தூள் ஏலம் இந்த வாரம் நடத்தப்படவில்லை.

இந்த நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் அதிகப்படியான தேயிலை விற்பனை செய்யப்படவில்லை. மேலும், நிதிஆண்டின் இறுதி நாளான கடைசி வியாழனன்று டஸ்ட் தர தேயிலை தூள் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அதனை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஏலம் நிறுத்தப்பட்டது என குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் போஜராஜன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்து வருவதால் வரும் நாட்களிலும் அதிகப்பயான தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடையும் என கருதப்படுகிறது. கொள்முதலாளர்களுக்கு தேயிலை சென்றடையாமல் உற்பத்திக்கான தொகை கிடைக்காது. இதனால், தற்போது பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...