கோவை நகருக்குள் புகுந்த அரிய உயிரினமான தேவாங்கு : வன உயிரின பாதுகாப்பு குழு உதவியுடன் மீட்பு..!

கோவை உக்கடம் பகுதியில் தேவாங்கு ஒன்று இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில், பசுமை பாதுகாப்பு அமைப்பினர் அதை பத்திரமாக மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை: கோவை, உக்கடம் பகுதியில் தேவாங்கு ஒன்று புகுந்து இருப்பதாகபசுமை பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அங்கு சென்ற பசுமை அமைப்பைச் சேர்ந்த சிநேக் அமீன், அந்த தேவாங்கை பத்திரமாக மீட்டு, மதுக்கரை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த வனத் துறையினரிடம், மீட்கப்பட்ட தேவாங்கு பத்திரமாகஒப்படைக்கப்பட்டது. 

இது குறித்து பசுமை பாதுகாப்பு இயக்கத்தினர் கூறும்போது:-

தேவாங்கு என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். பெரும்பாலும் அடர் வனப்பகுதிகளில் மர கிளைகள் இடையே இவைகள் வாழும். 

கோவை மாவட்ட வன எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான பாலக்காடு,மதுக்கரை போன்ற பகுதிகளில் இந்த அறிய வகை உயிரினம் காணப்படும்.தேவாங்குகளின் கண்களைச்சுற்றியுள்ள வட்ட வளையம் அவற்றைத் தனித்து அடையாளம் காண உதவுகிறது.

தற்போது, வனப்பகுதிகளில்கடும் வறட்சி நிலவுவதால்,உணவு, தண்ணீர் தேடி நகரத்துக்குள் வந்து இருக்கலாம். 

மெல்ல நகரும்.தன்மை கொண்டை இவவிளங்கு,

நாய், பூனை போன்றவற்றின் கண்களில் இருந்து தப்பித்து, நகரப் பகுதிக்குள் பத்திரமாக இருந்தது ஆச்சரியமாக உள்ளது. 

இதுபோன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வரும்பொழுது, பொதுமக்கள் அவற்றை அச்சுறுத்தாமல் வனத்துறை அல்லது வன ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) மதிப்பீட்டின்படி அச்சப்படும் அளவு எண்ணிக்கையில் உள்ள (Near Threatened) உயிரினமாக மெலிந்த தேவாங்குகள் உள்ளன. இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டம் – 1972 , பட்டியல் -1இல் இவ்விலங்கு உள்ளது. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...