வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி - காவல்துறை விசாரணை

கிணற்றில் விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலை சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக தேடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் சிறுவர்களின் உடல்களை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் உப்புபாளையம் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் கோகுல் (8), ஜெயக்குமாரின் மகன் அஸ்வின் (8) ஆகிய இரு சிறுவர்கள் 3 வகுப்பு படித்து வருகிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் தங்களுடைய சைக்கிள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அபெபோது திடீரென காணவில்லை என அக்கம்பக்கம் தேடிய நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் அருகே சைக்கிள் மற்றும் சிறுவர்களின் துணிகள் கிடந்துள்ளது. இதை அடுத்து சிறுவர்கள் கிணற்றில் உள்ளே இறங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி தீவிரமாக தேடினர். பின்னர் சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களின் உடலையும் சடலமாக மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒரே பகுதியில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும், இதுபோல் நீர்நிலைகள் குறித்தும் அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் எடுத்தது கூறவேண்டும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பள்ளிகள் கோடை விடுமுறை விடும் போதும் இது போல் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பலியாவது வேதனையளிக்கின்றது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...