போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன்

குண்டம் திருவிழாவிற்காக கோயில் வளாகத்தில் நேற்று இரவு அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது. இதில், விரதம் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று காலையில் பத்ரகாளியம்மன் தாயே போற்றி என குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்று வட்டார 18 பட்டி கிராம மக்களும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 8 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில், அவிநாசி கொடுமுடி திரௌபதி அம்மன், தர்மராஜா ஆலயங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கொலு வைத்து கொடிமரம் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தும் குண்டம் திருவிழாவிற்காக கோயில் வளாகத்தில் நேற்று இரவு அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பூ குண்டம் அருகே வான வேடிக்கையுடன் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை விரதம் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்ரகாளியம்மன் தாயே போற்றி என குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவை காண சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனை தரிசித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...