கடும் வறட்சி காரணமாக கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து வேறு இடங்களுக்கு யானைகள் இடமாற்றம்

கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி நிலவுவதால், அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை, மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என 20 யானைகளையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் பகுதியில் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளில் சில யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு வனப்பணிக்காக அழைத்துச் செல்லபடுகிறது.



தற்போது கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி ஏற்பட்டு யானைகளுக்கு போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை நீர் உள்ள மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என ஆகிய மூன்று வனப்பகுதிகளுக்கும் யானைகளை அனுப்பி அங்கு பராமரித்து வருகின்றனர்.

இந்த யானைகள் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பராமரிக்கப்பட்டு மீண்டும் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...