திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தில் பூங்கா - ஜூலை 1ம் தேதிக்குள் பதிலளிக்க கோவை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

ஓ.எஸ்.ஆர். இடம் மீட்கப்பட்டு பூங்கா அமைப்பது தொடர்பான வழக்கில் ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோவை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கோவை: பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக பதிலளிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை, நஞ்சுண்டாபுரம் ரோடு, பார்சன் குடியிருப்பில், 610 வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் 'கார் பார்க்கிங்', 'ஸ்டோர்' அமைக்கப்பட்டுள்ளதால், இடத்தை மீட்டு பூங்கா அமைத்துத்தரக்கோரி அப்பகுதியினர் மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து, கடந்த, 2019ம் ஆண்டு அங்கு வசிக்கும் பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கனகசுந்தரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இதுதொடர்பாக, ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கனகசுந்தரம் கூறுகையில்,''இங்குள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் பூங்கா அமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி மாநகராட்சியிடம் கடந்த, 2019ல் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தேன். தற்போது, அது உயிர்பெற்றுள்ளது. ஓ.எஸ்.ஆர்., இடம் மீட்பு விஷயத்தில் ஜூலை 1க்குள் கட்டாயம் மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐகோர்ட் எச்சரித்துள்ளது. எனவே, பணிகள் வேகமெடுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...