உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர் மரணத்துக்கு நீதி கேட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர் கூட்டமைப்பு சார்பில் கருப்பு சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டும், இறப்பிற்கு காரணமான இருவரை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்புசாமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கூலநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோமங்கலம் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில் கருப்புசாமி தன் கைப்பட எழுதிய மரண வாக்குமூலம் கிடைக்கப்பெற்றது. மரண வாக்குமூலத்தில் என்னுடைய சாவுக்கு காரணம் கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா, மக்கள் மித்திரன் ஆசிரியர் மணி ஆகியோர்தான் காரணம் என எழுதி இருந்தார்.



இந்த நிலையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டும், இறப்பிற்கு காரணமான இருவரை உடனே கைது செய்ய வேண்டும் எனவும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் மற்றும் வட்டாச்சியர் சுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு சாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை எங்களுக்கு போராட்டத்தை கைவிடமாட்டோம் என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர். தர்ணா போராட்டத்தின் போது தமிழக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் இடப்பட்டன. உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...