கோவையில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து முன் பாய்ந்து உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வெளியீடு

அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக உறவினர்கள் அழைத்து வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட ஆனந்த் என்பவர் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (40). இவருக்கு மன நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆனந்த்துக்கு கடந்த 21 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.



இதனால் சிகிச்சைக்காக அவரது தாய் மற்றும் பாட்டி ஆனந்தை பேருந்தில் அழைத்துச் செல்ல இரவு 9 மணியளவில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து முன் ஆனந்த் பாய்ந்தார். இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...