ஒரு குடம் குடிநீர் 12 ரூபாய், மாவட்ட நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு

கோவை, குனியமுத்தூர் பிளையார் புரம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதாக கூறியவர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் மாநகராட்சி சார்பில் அமைக்கபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறினர். 



மேலும் தங்கள் பகுதியில் தெரு விளக்கு கம்பம் அமைக்கபட்டு பல வருடங்கள் ஆகியும் விளக்குகள் பொருத்தப்படாமலேயே உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறியவர்கள் உப்பு தண்ணீர் முறையாக வழங்காத நிலையில் குடி நீருக்காக வாடகை வாகனம் அமர்த்தப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் நீர் எடுத்து வந்து உபயோகிப்பதாகவும் இதற்காக ஒவ்வெரு முறையும் ரூபாய் 350லிருந்து ரூபாய் 500 வரை செலவாகுவதாகவும் தனியார் வாகனம் மூலம் ஒரு முறை அதிகபட்சமாக 30 குடங்களில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதாக கூறிகின்றனர். 

மேலும், 1 குடம் குடிதண்ணீர் பெற ரூபாய் 12 செலவழிப்பதாக கூறினர். இது குறுத்து மாமன்ற உறுப்பினரிடம் கூறினால் ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது என கூறுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக தங்களை தேடி வருவதாக குற்றம் சாட்டினர். தங்கள் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கபட்டும் எந்த ஒரு நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை இதுவரை 3 ஆட்சியர்கள் மாறியுள்ளனர் ஆனால் தங்கள் பிரச்சனை இன்னும் தீரவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...