குளத்துப்பாளையம் பகுதியில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம், சென்னையை சேர்ந்த கோகுல், திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஏப்ரல்.25ம் தேதி அன்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (வயது 27), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம் (வயது 27), சென்னை கோகுல் (வயது 23), திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ( வயது 24) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்த போதைப் பொருள், கஞ்சா, 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...