கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழர்கள் மனு

இரண்டு மாதத்திற்குள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வீடுகளை ஒதுக்கி தந்தால்தான், தங்களுடைய குழந்தைகளை கோட்டூர் பகுதியில் இருந்து ஆழியாறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்று இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆண்டு முதல் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில் அரசு உத்தரவின்படி அவர்கள் வசித்து வந்த கோட்டூர் பகுதியில் உள்ள முகாமிடத்தை சீரமைத்து மொத்தம் 112 வீடுகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் அங்கு வசித்து வந்த இலங்கை அகதிகள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது 12 குடும்பங்களுக்கு மட்டும் அங்கு கட்டப்பட்டிருந்த வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. மீதம் இருந்த 15 குடும்பங்களுக்கு ஆழியார் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டது. தற்பொழுது அதன் திறப்பு விழாவும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் அந்த 15 குடும்பங்களுக்கும் அந்த வீடுகள் ஒதுக்கி தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு மின்சார வசதி செய்யவில்லை என்பது போன்ற பல காரணங்களை கூறுகின்றனர். இந்நிலையில் அந்த 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளனர்.

அதில் தற்பொழுது தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். மேலும் இரண்டு மாதத்திற்குள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. உடனடியாக வீட்டை ஒதுக்கி தந்தால் தான் தங்களுடைய குழந்தைகளை கோட்டூர் பகுதியில் இருந்து ஆழியாறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்து விட முடியும். அவருடைய கல்வி செலவையும், எங்களுடைய குடும்ப செலவுகளையும் சிரமம் இன்றி நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும். எனவே தங்களுக்கு உடனடியாக அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை ஒதுக்கி தரவேண்டும். மேலும் அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...