உக்கடம் வாலாங்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

வாலாங்குளத்தின் மேற்கு புறம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உக்கடம் வாலாங்குளம். இந்த குளம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு குளத்தின் கரையோரம் நடைபாதை செல்வதற்கு ஏற்றவாறு டைல்ஸ்கள் அமைக்கப்பட்டு நடைபாதை செல்வோர் அமர்வதற்கு சிறந்த இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தைச் சுற்றிலும் சிறிய வியாபார கடைகள், மற்றும் குளிர்சாதன கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் குளத்தின் கரையோரம் பூங்காக்கள் அமைப்பப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.



கிழக்குப்புறம் இவ்வாறு அமைக்கப்பட்ட போதும் மேற்கு புறமாக குளம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.



எனவே இந்த ஆகாயத்தாமரையை உடனே கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும், அவ்வாறு உடனே அகற்றாத பட்சத்தில் கிழக்கு புறமும் ஆகாயத்தாமரை படர்ந்து குளம் முழுவதும் பரவி விடும். இது இயற்கைக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கும். எனவே உடனடியாக இந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி இதனை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஏப்ரல்.29 கோவை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...