டாட்டா பவர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு - காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள மூத்தநாயக்கன்வலசு கிராமத்தில் டாட்டா பவர் நிறுவனம் தென்னிலை, பரமத்தி ஆகிய பகுதிகளில் 300க்கு மேற்பட்ட காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை கொண்டு வந்து மூத்தநாயக்கன்வலசில் துணை மின் நிலையம் அமைத்து அங்கிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள தூரம்பாடிக்கு உயர்மின் கோபுரத்தை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு வருகிறது.



இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது விவசாய நிலத்தின் மதிப்பு முழுமையாக பறிக்கப்படும், நிலத்தின் மதிப்பை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பறிக்கப்படுவதால் தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு DTCP, ஊராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார முகமைகளிலும் எவ்வித அனுமதி பெறாமல் நடைபெற்று வந்த பணியை கண்டித்து கடந்த 15-04-2024 நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தின் போது நிர்வாகத்தின் சார்பில் அனைத்து விதமான அனுமதிகளையும் பெறாமல் பணிகள் தொடங்கப்படாது என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி தற்போது சட்டவிரோதமாக PAP ஆயக்கட்டு விவசாய நிலத்தில், விவசாயம் அல்லாத பயன்பாடான தொழில் சார்ந்த பணிகளுக்கு, இரும்புகளை கொண்டு வந்து சேகரித்து வைக்கவும், கட்டுமானத்திற்கு தகுந்தார் போல் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்திட கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து விவசாயிகள், சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர் போராளிகள் என 200க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...