ரத்தினபுரி அருகே கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - 2 மர்ம நபர்களை தேடும் போலீசார்

ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று (ஏப்ரல்.29) தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 பேர் அவரிடம் பணம், செல்போன் தருமாறு மிரட்டி உள்ளனர்.

அவர் கொடுக்க மறுத்ததால் அவரிடம் இருந்த செல்போன் மற்றும்ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்துச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...