திருப்பூரில் சமத்துவ கும்மியாட்ட விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்பு

நொய்யல் நதியை பாதுகாக்கும் நோக்கத்துடன், முத்தையன் கோவிலில் நடைபெற்ற சமத்துவ கும்மியாட்ட விழாவில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு ஆடினர்.


திருப்பூர்: கொங்கு மண்டலம் பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்றது. இதில் இதில் மிக முக்கியமாக கும்மியாட்டம் இருந்து வருகிறது. கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் கொங்கு பகுதிகளுக்கு பெயர் பெற்ற கும்மி நடனம் ஆடுவது பலரையும் கவர்ந்து வருகிறது. இதுபோல் பலரும் இந்த கும்மியாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில்,திருப்பூரில் வேலவன் கும்மி ஆய்வு மையம் சார்பில், நொய்யல் நதியை பாதுகாக்கவும், நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுத்து இயற்கையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்சமத்துவ கும்மி அரங்கேற்ற விழா திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள முத்தையன் கோவில் பகுதியில் நடந்தது.



இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் கவரும் வகையிலான ஒரே வண்ணத்திலான உடையணிந்து, உற்சாகமாக கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று ஆடினர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...