கோடை விடுமுறை: கோவை நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை..!

மே 1- 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் பிரிவு நடுவர் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.


கோவை:கோவையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 - ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடைக் காலத்தையொட்டி மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் பிரிவு நடுவர் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.

ஆனால், சிறப்பு மற்றும் விரைவு நீதி மன்றங்கள் வழக்கம் போல செயல்படும். மேலும், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் வழக்கம் போல செயல்படும்.

அதேபோல, மாவட்ட முதன்மை நீதிமன்ற விடுமுறையால், பிணை, முன் பிணை, அவசர வழக்குகள், அவசர சிவில் வழக்குகளை விசாரிக்க கோடைக் கால நீதிமன்றம் செயல்படும் சென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது வாரத்தில் ஒரு நாள் விசாரணை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...