கோடை விடுமுறை: கோவை நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை..!

மே 1- 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் பிரிவு நடுவர் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.


கோவை:கோவையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 - ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடைக் காலத்தையொட்டி மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் பிரிவு நடுவர் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.

ஆனால், சிறப்பு மற்றும் விரைவு நீதி மன்றங்கள் வழக்கம் போல செயல்படும். மேலும், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் வழக்கம் போல செயல்படும்.

அதேபோல, மாவட்ட முதன்மை நீதிமன்ற விடுமுறையால், பிணை, முன் பிணை, அவசர வழக்குகள், அவசர சிவில் வழக்குகளை விசாரிக்க கோடைக் கால நீதிமன்றம் செயல்படும் சென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது வாரத்தில் ஒரு நாள் விசாரணை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...