பொள்ளாச்சியில் திமுக சார்பில் மே தின ஊர்வலம் - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கோவை சாலை, புதிய திட்ட சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேர்நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.



பின்னர் உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வர சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...