தமிழக தபால்காரர் பணிக்கு வடமாநிலத்தவரை மோசடி செய்து தேர்வு செய்ததைக் கண்டித்து கோவையில் தலைமை அஞ்சலகம் முற்றுகை

தமிழகத்தில் தபால்காரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவரை தேர்வு செய்ததாகக் கூறி, கோவையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழகத்தில் தபால் துறையில் காலியாக இருந்த 300 தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவர்களை தேர்வு செய்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை கூட்ஸ்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு அவ்வமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது முழக்கங்களை எழுப்பியபடி அஞ்சலகத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தபட்ட எழுத்துத் தேர்வில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் பெற்று எப்படி தேர்ச்சி பெற்றனர் என கேள்வி எழுப்பிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தேர்வில் குளறுபடி செய்து தமிழர்களின் வேலை வாய்ப்புகள் பறித்து வட மாநிலத்தவர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல மத்திய அரசு பணியிடங்களில் தொடர்ந்து தமிழர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தபால்காரர் பணியிட நியமனங்களை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...