13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் வழங்குதல், மாதந்தோறும் மருத்துவத்திற்கு ரூபாய் ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், இந்த 13 அம்ச கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி அவரிடம் இருந்து தமிழக முதலமைச்சருக்கு முறையீடாக அனுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.மதன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சின்னசாமி, மாநில துணைத் தலைவர் எஸ்.சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பி.நடராஜன் உள்ளிட்டு 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...