கோவை ஆர்.எஸ்.புரம் அருகே செல்போன் டவரில் இருந்து விழுந்து ஊழியர் பலி - ஒப்பந்ததாரர் மீது வழக்கு

ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்த ஊழியர், திடீரென நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கோவையில் தங்கியிருந்து செல்போன் டவர் பராமரிப்பு பணி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று (மே.2) கார்த்திக் ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.



இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கார்த்திக்கை பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்போன் டவர் ஒப்பந்ததாரர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த வேலுசாமி (60) என்பவர் மீது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியரை பணிக்கு அமர்த்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...