கோவையில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று - சில இடங்களில் லேசான மழை

இன்று மாலையில் கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசியது. செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று (04-05-2024) அக்னி நட்சத்திர வெயில் காலையிலிருந்து மதியம் வரை வெளுத்து வாங்கியது. ஆனால் மதியத்துக்கு பிறகு வெயிலானது சற்று தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து கோவையில் இன்று மாலை திடீரென்று வெயிலின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீச தொடங்கியது. கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் புழுதி காற்றுடன் கூடிய சூறாவளிக்காற்று வீசியது.செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

மேலும் கோவையின் பெரும்பாலான இடங்களில் இன்று மே.4 பலத்த காற்று மட்டுமே வீசியது. இதன் காரணமாக கோவை மாநகரில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...