சவுக்கு சங்கர் கைது: 14 நாள் நீதிமன்ற காவல் - கோவை நீதிமன்ற உத்தரவு

கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு நீதிபதி கோபாலகிருஷ்ணன் 14 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் அவரது காரில் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காக கோவை சைபர் க்ரைம் போலீஸாரால்கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு, சவுக்கு சங்கர் கோவை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அங்கு கூடியிருந்த திமுக மாவட்ட மகளிர் அணியினர் சவுக்கு சங்கரை கண்டித்து கோஷங்களை எழுப்பி, காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டனர். 





கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது ஐபிசி பிரிவுகள் 294-பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 509 (பெண்களை அவதூறாகப் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் கஞ்சா வழக்கும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





இந்த நிலையில், நேற்று சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது, நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து செல்வதற்காக வெளியே அழைத்து வந்த போது "ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்க சவுக்கு மீடியா தடையாக இருப்பதால் தான் மேலும் மேலும் பொய் வழக்குகள் போடுகிறார்கள்" என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...