பிளஸ் டூ தேர்வில் 97.45 சதவீதம் - திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்றுக்கொடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் சதவீதம் 97.45 ஆகும். தமிழகத்தில் முதல் இடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 2-து இடம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக 2019, 2020ம் ஆண்டுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. நடப்பு ஆண்டும் முதல் இடம் பிடித்ததால் 3 முறை முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.

சாதனை படைத்த மாணவர்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் கல்வி அதிகாரி கீதா மற்றும் ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர். இதுபோல் அரசு பள்ளி அளவிலும் 95.75 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் 77 அரசு பள்ளிகள் உள்ள நிலையில், 4,548 மாணவர்கள், மாணவிகள் 5,935 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 483 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4,274 பேர், மாணவிகள் 5, 763 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 037 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும் தங்களது உயர்கல்வி தொடர வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் +2 தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்றுக்கொடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துகள். திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும், உயர்கல்வி தொடர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை பொருத்தவரை 95.75 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்களின் கடின உழைப்பால் தான் நாம் முதலிடத்தை அடைய முடிந்தது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகிய நாங்கள் எல்லாம் சிறு வழிகாட்டுதல் மட்டுமே. அதுமட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3வது முறை முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...