உடுமலை அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்களின் மாதம் என்று சொல்லுமளவுக்கு பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். கோடை வெயில் கொளுத்தும் காலத்தில் தெய்வங்களை மட்டுமல்லாமல் மண்ணையும், மனிதர்களையும் குளிர்விக்கும் சக்தி திருவிழாக்களுக்கு உண்டு. அந்தவகையில் உடுமலை அருகே பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது.



முதல் நிகழ்வாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நோன்பு கட்டப்பட்டு அன்றைய தினமே அமராவதி ஆற்றில் திருக்கம்பத்துக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு இரவு 11 மணியளவில் திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிலையில் இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாளை மே 7-ம் தேதி ஊர் பூவோடு எடுக்கும் நிகழ்வும், வரும் மே 8 ம் தேதி இரவு 9 மணியளவில் மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி வீதி வீதியாக பயணம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து சித்திரைத் திருவிழா கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...