கோவை மத்தியசிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி..!

கோவை மத்தியசிறையில் அனுமதிக்கப்பட்ட சிறைவாசிகள் கல்வி மற்றும் மறு வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு, 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Coimbatore: கோவை மத்தியசிறையில் தற்போது சுமார் 2300 சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான யோகா, கல்வி, தொழிற்கல்வி போன்ற பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023 - 2024 கல்வியாண்டில் 12 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 21 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

தண்டனை சிறைவாசிகள் சுப்புராஜ், மன்சூர் அகமது மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை பெற்று தலைசிறந்த தேர்வு முடிவுகளை பதிவு செய்துள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ம். செந்தில்குமார் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறியுள்ளார். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் அவர்களும் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினார்.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...