பவானி ஆற்றில் மின்மோட்டார் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க மாவட்ட வருவாய் துறை கட்டுப்பாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்றிலிருந்து கோவை மாநகரத்திற்கு மட்டுமின்றி திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்காக 16 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பெரிய அளவில் அரசு அனுமதியுடன் மின் மோட்டார் மூலம் பவானியாற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதே போல் பவானியாற்றிலிருந்து விவசாய பாசனத்திற்கு நெல்லித்துறை முதல் சிறுமுகை வரை 200-க்கும் மேற்பட்ட மின் மோட்டார் மூலம் விவசாயிகள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனிடையே பருவமழை தவறியதால் பவானியாற்றிலிருந்து பவானிசாகர் அணைக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நீர்நிலை மேலாண்மையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த அறிக்கையைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் விவசாய பாசனத்திற்கு செல்லும் மின் மோட்டார்கள் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், தமிழகத்தில் 32 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2047 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு 184 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரத்தை பேணிக்காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடி நீர் ஆதாரமாக பவானி ஆறு விளங்குகிறது. ஆகவே இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் மின் மோட்டார் மூலம் பவானியில் இருந்து நீர் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதற்கு விவசாய சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன் பதிலளித்து பேசினார். பின்னர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன முழுக்கங்களை விவசாயிகள் எழுப்பினர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...