கோவையில் காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது

கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்புகள் கோவை மாநகர் காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் இன்று துவங்கின. 6 நாட்களில் சுத்தம், தன்னம்பிக்கை போன்றவை கற்பிக்கப்படும்.


கோவை: கோவையில் மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவலர்களின் குழந்தைகளுக்கான 6 DAYS WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது.



இத்திட்டம் மே 8, 11, 13, 15, மற்றும் 17 ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த பயிற்சியில் காவலர் குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் 102 மாணவ/மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பில் SPIEGEL TRAINING AND FOUNDATION நிறுவனர் சத்தியமூர்த்தி சீரிய பயிற்சிகளை நடத்துகிறார். இப்பயிற்சிகளில் சுத்தம், தன்னம்பிக்கை, சுய மதிப்பு, சுய ஒழுக்கம், உணவு வழக்க வழக்கங்கள், மற்றும் தனித்திறமையை கண்டறிதல் ஆகியவை பயிற்சியாக வழங்கப்படுகின்றன.

இதுபற்றி பேசிய பாலகிருஷ்ணன் மாணவ/மாணவிகளை தங்களது ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றும், தங்களது முடிவுகள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகர் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகரும் பங்கேற்றார்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...