கோவையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கோவையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இன்று ஆர்.ஜி.தெரு, தாமஸ் தெரு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் குட்கா பொருட்கள் அதிகளவில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குட்கா, பான்மசாலா அதிகளவில் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கோவையில் பிடிபட்டுள்ள சுமார் 2.5 டன் எடையுள்ள இந்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் பொள்ளாச்சி உள்ளிட்ட கோவை மாநகரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற புகையிலைப் பொருட்கள் கோவைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. 

கடந்த காலங்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்களே தற்போதும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குற்றச் செயலில் ஈடுபட்டுவருவோரை தொடர்ந்து தேடி வருகிறோம். 



மேலும், பேருந்துகள் மூலம் புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தவிர்க்க வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களிடமும் இதுகுறித்து அறிவுரை வழங்கியுள்ளோம்" என தெரிவித்தார்

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...