பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 94.01 சதவீதம் பெற்று கோவை மாவட்டம் 12வது இடம் பிடிப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் ஒருபடி முன்னேறி இந்தாண்டு 12வது இடத்தை பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.


கோவை: 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 26.03.24 துவங்கி 08.04.24 அன்று முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த தேர்வில் மாணவர்கள் 4,47,203 பேரும், மாணவிகள் 4,47,203 பேர் என மொத்தம் 8,94,264 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாற்று திறனாளிகள் 13510 தேர்வு எழுதிய நிலையில் 12491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் பெற்றுள்ள நிலையில் கோவை மாவட்டம் 94.01% பெற்று 12-வது இடத்தை பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 19614 மாணவர்களும், 20126 மாணவிகள் என 39740 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் ஒருபடி முன்னேறி 12 இடத்தை பிடித்துள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...