கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உடைந்து விழுந்த டைல்ஸ் கல் - இருவர் காயம்

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மீது திடீரென டைல்ஸ் கல் உடைந்து விழுந்ததில், ஒருவருக்கு தலையிலும், மற்றொருவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு டைல்ஸ் கல் பதிக்கும் பணி நடைபெற்றநிலையில் தற்போது உடைந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய பில்டிங் உள்ளது. இங்கு விமான நிலைய நிலம் கையகப்படுத்துதல் துறை இயங்கி வருகிறது. இங்கு சிங்காநல்லூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக இன்று (மே.10) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, நில உரிமையாளர்களான செந்தில் குமார் மற்றும் தீபன் ரமேஷ் ஆகியோர் வந்தனர்.

கூட்டம் நிறைவு பெற்றதும் அங்குள்ள கை கழுவும் இடத்தில் இருவரும் கை கழுவ சென்றனர்.



அப்பொழுது சுவற்றில் பதிக்கபட்டு இருந்த டைல்ஸ் கல் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்து இருவரது மீதும் விழுந்தது. ஒருவருக்கு தலையிலும், மற்றொருவருக்கு கை பகுதியிலும் விழுந்ததில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது.



பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த அரசு அதிகாரிகள் சில நிமிடங்களில் எதுவும் நடக்காதது போல மீண்டும் தங்களது அறைக்கு திரும்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம். இங்கு டைல்ஸ் கல் உடைந்து காயம் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த டைல்ஸ் கல் பதிக்கும் பணிகளுக்கு டெண்டர் விட்டு, வட மாநிலத்தவர்கள் டைல்ஸ் ஒட்டும் பணி மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...