கோட்டூரில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோட்டூர் பேரூராட்சியின் 6, 8, 10 மற்றும் 12 வது வார்டுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், வேண்டப்பட்டவர்கள் வார்டுகளுக்கு மட்டும் தினமும் குடிநீர் வழங்குகிறது என்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. ஆழியார் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கோட்டூர் பேரூராட்சியின் 6, 8, 10 மற்றும் 12 வது வார்டுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி நேற்று இரவு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோட்டூர்-அங்கலக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, பேரூராட்சி நிர்வாகம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வார்டுகளுக்கு மட்டும் தினமும் குடிநீர் வழங்குகிறது. எங்கள் பகுதிக்கு ஐந்து நாட்கள் நாட்கள் ஆகியும் இதுவரை குடிநீர் வழங்கவில்லை. முறையாக குடிநீர் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.



இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதனால் பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...