'காவசாகி' என்ற அரியவகை நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

காவசாகி நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளதாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டது. தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால் குழந்தைகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் குழந்தைகளுக்கு காவசாகி என்ற அரியவை நோய் கண்டறியப்பட்டது.

இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், கை கால் வீக்கம், தோல் உரிவது, நெரி கட்டுவது போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் இதயத்தையும், ரத்த நாளங்களையும் பாதிக்க கூடிய இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோயிக்கு அளிக்கப்படும் எதிர்ப்பு சக்தி மருந்து ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இம்யுனோ குளோபுலின் என்ற மருந்து செலுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து குழந்தைகள் நோயிலிருந்து மீண்டு அண்மையில் நல்ல உடல் நலத்துடன் குழந்தைகள் வீடு திரும்பினர்.

கடந்த ஒரு வார காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் 1 லட்சம் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டு, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நேற்று மே.10 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...