மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

பில்லூர் அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அணை தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்ட மக்களின் தாகத்தை தணிப்பதில் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள பில்லூர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையை நீர் ஆதாரமாக இந்த அணை கொண்டுள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக இந்த அணை வறண்டு காணப்படுகிறது.

100 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 60 அடிக்கு மேல் சகதி நிரம்பி காணப்படுகிறது. இந்த அணையை தூர்வார வேண்டும் என்று கோவை மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் நேற்று (மே.10) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



மேலும், அணையினை தூர்வாருதல் பணியினை துரிதப்படுத்தி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) பிரேம்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, கோவை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...